முகவரி: பொன்னி, 31, பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை, சென்னை ‍ 600 028
 முகப்பு
 கவிதைப் பட்டறை
 பதிவுசெய்ய
 
அன்புடையீர், வணக்கம்!

தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றமும், தென்னகக் கலைபண்பாட்டு மையமும் இணைந்து நடத்தும் கவிதைப் பட்டறை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் பிப்ரவரி 27, 28, மார்ச் 1 ஆகிய தினங்களில் நடைபெற இருக்கிறது.

இந்த கவிதைப் பட்டறையில் தமிழின் முக்கிய கவிஞர்கள் கலாப்ரியா, ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், பத்திரிக்கையாளர் ஏ. எஸ். பன்னீர்செல்வன் போன்றவர்கள் பங்கேற்று கவிதைக் கலை பற்றியும், இன்று உலகளவில் நிகழும் கவிதைப் போக்குகள் பற்றியும் உரையாற்றுகின்றனர்.

முக்கிய கவிஞர்கள் தங்களின் பிரபலமான கவிதையை தாங்கள் எழுதிய விதம் பற்றியும் விளக்க உரை ஆற்ற உள்ளனர். இந்த முக்கியமான கவிதா நிகழ்வினை இள‌ம் கவிஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறோம்.



கவிஞர் இளையபாரதி   
உறுப்பினர் - செயலாளர்